crossorigin="anonymous">
உள்நாடுபொது

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

இலங்கை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமைய கருத்தில் கொண்டு மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் கூடுதல் தொகையை ஈடு செய்யும் வகையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 − = 49

Back to top button
error: