crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை

உலக வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியமடு கிழக்குப் பகுதிகள் 11.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற விவசாயிகளின் உற்பத்தி பொருட்களைப் பாதுகாக்கும் குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை அமைப்பதற்கான அடிக்கல்லை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  காதர் மஸ்தான் அவர்களினால் இன்று (15) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீ மெல், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் திரு.என்.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.மகேஸ்வரன், மாகாண விவசாய பணிப்பாளர் திரு.சிவகுமார், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜனாப்.ஷுகூர், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான எ.ஸி.நௌபில் மற்றும் பி.என். லாபிர் ஆகியோருடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 33 =

Back to top button
error: