![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb236-e1628820836941-780x470.jpg)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 190 மரணங்கள் நேற்று (23) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (24) தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 7,560 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 190 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 7,750 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று மரணமடைந்த 190 பேரில், 113 பேர் ஆண்கள், 77 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 150 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.