
இலங்கையில் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்.