crossorigin="anonymous">
உள்நாடுபொது

களுத்துறை – தியகமயில் ‘டிங்கர் லசந்த’ சந்தேகநபர் பொலிஸாரின் சூட்டில் மரணம்

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ‘டிங்கர் லசந்த’ என அழைக்கப்படும் ஹேவா லுணுவிலகே லசந்த எனும் சந்தேகநபருடன் இன்று (26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் பொலிஸாரின் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் வசமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை மீட்டபோது சந்தேகநபர் குறித்த கைத்துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது இடம்பெற்ற பதில் தாக்குதலிலேயே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணமடைந்த சந்தேகநபர், ஷன்சைன் சுத்தா எனும் சந்தேகநபரின் கொலை உள்ளிட்ட மேலும் பல குற்றச் செயல்களுடன் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 + = 47

Back to top button
error: