crossorigin="anonymous">
உள்நாடுபொது

யுகதனவி உடன்படிக்கை எதிராக வாக்களிப்போம் – வாசுதேவ நாணயக்கார

பாராளுமன்றத்தில் யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்போம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கூட்டுப் பொறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடுகிறோம். கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், கூட்டுப் பொறுப்பில் சிக்கல் இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டும்.

இது குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் தனித்தனியாக கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. யுகதனவி உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், நாம் அளிக்கும் வாக்கு தீர்மானத்திற்கு எதிராகவே அமையும்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடி செல்ல மாட்டோம், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன்.என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 21 = 24

Back to top button
error: