crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப் புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (21) முற்பகல் 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்றைய தினம் (20) முற்பகல் 8.00 மணி முதல் நாட்டின் 5 மாவட்டங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்க்பபட்டிருந்தது.

மன்னார், நுவரெலியா, திருகோணமலை, பொலன்னறுவை, இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களில் 24 மணி நேர அடையாள பணிப் புறக்கணிப்பாக முன்னெடுக்கப்பட்ட இப்பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததால், நாளை (21) மு.ப. 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் இப்போராட்டத்தை தொடரவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 67

Back to top button
error: