crossorigin="anonymous">
உள்நாடுபொது

4 மணித்தியாலம் 40 நிமிட மின்வெட்டு

கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளிலும் மின் வெட்டு

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (24) வியாழக்கிழமை 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளிலும் இன்று முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − 74 =

Back to top button
error: