crossorigin="anonymous">
உள்நாடுபொது

11 வலயங்களாக பிரித்து ஒரே கட்டத்தில் மின்வெட்டு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (01) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இலங்கையை 11 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் ஒரே கட்டத்தில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.ப. 6.00 – பி.ப. 10.00 மணி வரையான காலப் பகுதியின் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒவ்வொரு வலயத்திலுமுள்ள பிரதேசத்திலும் 2 கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 15

Back to top button
error: