crossorigin="anonymous">
உள்நாடுபொது

இரு கட்டங்களில் மின் வெட்டு அமுல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (05) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது

இலங்கையை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

E,F இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 7 மணித்தியாலங்களும் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.30 மணி வரை 4 மணித்தியாலங்கள், பி.ப. 4.30 முதல் இரவு 10.30 மணி வரை 3 மணித்தியாலங்கள்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 4 மணித்தியாலங்களும் மு.ப. 8.30 முதல் பி.ப. 5.30 மணி வரை 3 மணித்தியாலங்கள், பி.ப. 6.00 முதல் இரவு 10.00 மணி வரை 1 மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 8

Back to top button
error: