வெளிநாடு
புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு – உறுதி செய்தது சுகாதார ஸ்தாபனம்.

உலக சுகாதார அமைப்பு, டெல்டக்ரோன் என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதை உறுதிசெய்துள்ளது.
அது டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளது.
அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் இதனை உறுதிசெய்தார். அந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்று அமைப்பு கூறியது.